|
|
ஏன் ஜனவரி 30
மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்ட ஜனவரி 30-ம் தேதியை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், மதவெறி- பயங்கர வாத எதிர்ப்பு, மக்கள் ஒற் றுமை நாளாக கடைப் பிடிக்க உள்ளது.
| | | |
|
|
|
மகாத்மா காந்தி படு கொலை செய்யப்பட்ட ஜனவரி 30-ம் தேதியை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம், மதவெறி- பயங்கர வாத எதிர்ப்பு, மக்கள் ஒற் றுமை நாளாக கடைப் பிடிக்க உள்ளது.
சென்னையில் நடை பெற்ற தமுஎச மாநாட்டில், ஜனவரி 30ஆம் நாளை மதவெறி-பயங்கரவாத எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமை நாளாக கடைப்பிடிக்கு மாறு அறைகூவல் விடுக்கப் பட்டது.
மகாத்மாவைக் கொன்ற மதவெறிக் கூட்டம், மக்க ளிடையே பகைமைத் தீயை மூட்டிவிட்டு, மத்தியில் மீண்டும் அரசியல் அதிகா ரத்தைப் பிடிக்கத் துடிக் கிறது. ஒரிசா மாநிலம் காந்த மால் உட்பட நாட்டின் பல் வேறு இடங்களில் சிறு பான்மை மக்கள், ஆர்எஸ் எஸ் பரிவாரத்தினால் குறி வைத்துத் தாக்கப்படுகின் றனர். மதவெறி சக்திகள் மீண்டும் தலைதூக்குவது, எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாக முடியும்.
மறுபுறத்தில், மும்பை யில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், தேசத்தையே அதிர்ச்சியடைய வைத்துள் ளது. மதவெறியும்- பயங்கர வாதமும் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கிறது. மாலேகாவ் குண்டுவெடிப் பில், இந்துத்துவா அமைப் பைச் சேர்ந்தவர்கள் சிக்கி யிருப்பதன் மூலம் பயங்கர வாதத்திற்கு மதம் கிடை யாது, என்பது நிரூபண மாகியுள்ளது.
இந்நிலையில், மதவெறி- பயங்கரவாத சக்திகளுக்கு எதிராகவும், மக்கள் ஒற் றுமை, மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை ஆகியவற் றை உயர்த்திப் பிடித்தும், கலை- இலக்கியப் பண் பாட்டு போராளிகள் களம் இறங்குவது அவசியமாகும்.
ஜனவரி 30-ஆம் தேதி, தமிழகத்தில் 150-க்கும் மேற் பட்ட இடங்களில், தமுஎச சார்பில் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை ஓவியங் கள் வரைதல், உறுதிமொழி யேற்பு என பல்வேறு வடி வங்களில் நிகழ்வுகள் நடை பெற உள்ளன.
|